/* */

ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆயிரப்பேரி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

ஆயிரப்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

பழைய குற்றாலத்தில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதிய கிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 2020 மற்றும் 21 வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய மாநில அரசின் திட்டங்கள், ஊட்டச்சத்து மற்றும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் ரேவதி, உறுப்பினர்கள் பட்டமுத்து, முத்துலட்சுமி, இசக்கி பாண்டி, முருக செல்வி, முகமது இப்ராகிம், கால்நடை ஆய்வாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் மதிவாணன், கிராம நிர்வாக அதிகாரி சோபியா, தோட்டக்கலை துறை விஜயசந்திரன், வேளாண்துறை நாகராஜன், கல்வித்துறை பாத்திமா யாஸ்மின், ரேஷன் கடை மாரிமுத்து முருகேசன், கிராம உதவியாளர் கிருஷ்ணசாமி, மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 1:04 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...