/* */

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்

வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

HIGHLIGHTS

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்
X

குற்றாலத்தில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் முன்னதாகவே நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குவிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அருவிகளில் கரையோர சாலை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 May 2022 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...