/* */

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
X

மதுரை தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13 புதன்கிழமை அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மதுரையிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் டிரைவர் (06006) நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரையில் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Updated On: 5 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!