/* */

சென்னைக்கு போனால் இனி நீங்கள் கப்பலில் சுற்றலாம்! வருகிறது புதுதிட்டம்

சென்னையில், கப்பல் மூலம் கடலுக்கு சென்று திரும்பும் 2 நாள் சுற்றுலாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சென்னைக்கு போனால் இனி நீங்கள் கப்பலில் சுற்றலாம்! வருகிறது புதுதிட்டம்
X

கோப்பு படம் 

சென்னைக்கு செல்வோர், மெரினா கடற்கரையின் அழகில் மயங்கிப் போவார்கள். அதே போல், கடலில் தெரியும் கப்பலை பார்த்து, அதை போய்ப் பார்க்க மாட்டோமா என்ற ஏங்குபவர்களும் உண்டு.

சென்னைக்கு ரயிலில் சென்றுவிடலாம்; மெட்ரோ ரயிலில் பறக்கலாம். அவ்வளவு ஏன், விமானத்திலும் குறைந்த கட்டணத்தில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த கப்பலில் போவது மட்டும் கனவாகவே உள்ளது என்று பெருமூச்சு விடுபவர்களின் ஏக்கத்தை போக்க, தமிழக அரசு கப்பல் சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: சென்னையில் வரும் ஜூன் மாதத்தில் கப்பல் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து, சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும். இது, 2 நாள் சுற்றுலா திட்டமாகும்.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Updated On: 18 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...