/* */

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. 

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது பருவநிலை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், சுற்று வட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் மழை தொடங்கிய உடனே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் முதலே குளிக்க தடை விதித்திருந்தது.

இந்நிலையில் திடீரென பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவியிலும் தண்ணீர் அதிகரிப்பதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது தொடர்ந்து குற்றாலம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சரல் மழை பெய்வதால் மேலும் தண்ணீர் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 2 Aug 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?