/* */

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கெளரவித்த மாணவர்கள் : அருப்புக்கோட்டையில் நெகிழ்ச்சி

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கெளரவித்த மாணவர்கள் : அருப்புக்கோட்டையில் நெகிழ்ச்சி
X

அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் கடந்த 1995ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1995 வருடம் படித்த மாணவர்கள் ஒன்று கூடி மாணவர்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியானது தனியார் மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் உடன் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் மாணவர்கள் ரத்த தான முகாமினை நடத்தி இரத்ததானம் செய்தனர்.

பின்னர் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ஆசிரியர்களின் கால்களில் மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.பின்னர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.மாணவர்கள் தனித்தனியாக ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா். இந்நிகழ்ச்சியானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நட்பையும், அன்பையும் பரிமாற்றம் செய்யும் நல்ல நிகழச்சி என்று ஆசிரியர்கள் கூறினர்

Updated On: 22 Dec 2020 5:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!