தொழிற்சாலையில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

12 பேரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Industrial Employees Agitation
பொன்னேரியில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்பாட்டம்.கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் தனியாருக்கு சொந்தமான ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஹைட்ராலிக் சிலிண்டர் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் புதிய தலைமை பொறுப்பேற்ற பின்பு கடந்த 20 ஆண்டுகளாக பணி புரியும் 12 நிரந்தர தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக வேலை நீக்கம் செய்தது.இதனை எதிர்த்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அராஜக போக்கினை கண்டித்து அந்நிறுவனத்தின் வாசலில் அமர்ந்து கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களை ஆதரிக்கும் விதமாக சிஐடியு சங்கம் தொழிலாளர்களுடன் இணைந்து நிர்வாகத்தின் போக்கினை கண்டித்து பொன்னேரியில் ஆர்பாட்டம் நடத்தினர். குடும்பத்துடன் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.அர்ஜுனன், குமார், நித்யானந்தம், நடராஜன், நடேசன், சந்தானம், விநாயகமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu