உயர்கோபுர மின் விளக்குகள் : எம்எல்ஏ பழனி நாடார் தொடங்கி வைத்தார்..!

உயர்கோபுர மின் விளக்குகள்  : எம்எல்ஏ பழனி நாடார் தொடங்கி வைத்தார்..!
X

 மின்விளக்குகளை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் இயக்கி வைத்த போது எடுத்த படம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்டசுரண்டை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது

32 லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் மின் விளக்குகள் -சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியில் இருந்து சமீப காலத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நகராட்சியில் முதல் நகரமன்ற தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வள்ளி முருகன் உள்ளார். இவர் நகராட்சியை முதன்மை நகராட்சியாக கொண்டு வரும் பொருட்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் நிதியிலிருந்தும், நகர்மன்ற பொது நிதியிலிருந்தும் சுமார் 32 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள், மற்றும் ஒளிரும் மின்விளக்குகள் ஆகிய பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

இதனை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன்,காங்கிரஸ் நகரத் தலைவர் ஜெயபால் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture