தனியார் மயமாக்கலை கண்டித்து ஆர்பாட்டம்
அரக்கோணம் ரயில் நிலையம் முகப்பில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தனியார் மயமாக்கலை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது..
நாடு முழுவதும் கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் அதிவிரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் தடைசெய்யப்பட்டன சமீபகாலமாக கட்டுக்குள் வந்தது.மத்திய மாநில அரசு பணியாளர்கள் பணிக்கு செல்லவும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிக்கவும் கட்டுப்பாடுகளுடன் ரயில்வே நிர்வாகம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ரயில்களை இயக்கி வருகின்றது. மேலும் ஒருசில தொலைதூர ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுடன் இயக்கப்படுகின்றது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்களில் குறிப்பிட்ட கால நேரத்தில் பெண்கள் செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களில் அனைத்து ஆண் பயணிகளையும் பயணிக்க அனுமதி வழங்க வலியுறுத்தியும் ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கலை கண்டித்தும் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் ரயில் பயணிகள் மத்திய மாற்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி விரைவில் ஆண் மற்றும் அனைத்து வகை பயணிகளையும் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu