ஊட்டி பகுதிகளில் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலையில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

ஊட்டி, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இரவு முதல் பகல் காலை 10 மணி வரை கடும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்பட்டது. பின்பு சாரல் மழையும் தற்போது மிதமான மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் சாலைகளில் மேகமூட்டம் காணப்படுவதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்கின்றன.

Tags

Next Story
ai in future agriculture