/* */

கொய்மலரில் மகத்தான மகசூல் ஈட்டும் விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கொய்மலா் விற்பனை வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகள் புதியதாக ஹைட்ரஜன்யா மலா்களை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனா்.

கென்யா, ஆலந்து நாடுகளில் வளரும் புதியவகை கொய்மலா்கள் கோத்தகிாியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நீலகிாி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக ஊட்டி, கோத்தகிாி, குன்னுாா் பகுதியில் பசுமை குடில்கள் அமைத்து காா்னீசியன் ஜா்பரா லில்லியம் போன்ற கொய்மலா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். கொரோனா பாதிப்பின் காரணமாக சுமாா் ஆறு மாதங்களாக கொய்மலா் விற்பனை வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகள் சிலா் தற்போது நட்சத்திர ஹோட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய பயன்படும் ஹைட்ரஜன்யா மலா்சாகுபடி கோத்தகிாியில் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த மலா்கள் கென்யா, ஆலந்து நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மலா்களுக்கு ஏற்ற காலநிலை நீலகிாி மாவட்டத்தில் உள்ளதால் நன்றாக செடிகள் வளா்ந்து மலா்கள் பூத்து உள்ளதாக விவசாயிகள் தொிவித்தனா். மேலும் பிளாஸ்டிக் கூரைகளால் குடில்கள் அமைத்து மண்ணிற்கு பதிலாக தேங்காய் நாா் மற்றும் உரங்கள் அடங்கிய கலவையில் ஹைட்ரஜன்யா மலா்நாற்றுகளை நடவு செய்து பராமாித்து வந்தால் ஒரு வருடத்தில் பூக்கள் மலர தொடங்கும். மாதம் ஒரு முறை என 20 ஆண்டுகள் பூக்களை பறிக்க முடியும். ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். இதனால் தற்போது ஒரு மலருக்கு 100 முதல் 150 வரை கொள்முதல் விலை கிடைத்து வருவதாக வருவதாக விவசாயிகள் தொிவித்துள்ளனா்.

Updated On: 1 Jan 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு