மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
X

மதுரை கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கீரைத்துறை சிந்தாமணி ரோடு பாம்பன் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் விற்பனை செய்த கீரைத்துறையைச் சேர்ந்த காளீஸ்வரன் (29), ராமகிருஷ்ணன் என்ற அனல் ராமர் (36), மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த குமாரவேல்(25), அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் (43) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai in future education