/* */

மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி

மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி
X

மதுரையிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்திற்கு 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றுமதி செய்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டாஃபே நிறுவனம் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கிருந்து 25 சரக்கு பெட்டிகளில் 170 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றப்பட்டு வங்காளதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் முதன்முறையாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள் ஏற்றும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

தென்னக ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் தயாரிக்கப்பட்ட டிராக்டர், ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jan 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...