கரூர் : மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் :  மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டம் முழுவதும் இன்று தூறி கொண்டிருக்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

கரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்து லேசாக மழை பெய்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தில் இன்று காலை முதல் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான மழை தூறல் ஆரம்பித்தது. தொடர்ந்து காலை முதலே அவ்வப்போது லேசாக தூறியபடி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வோர் மற்றும் பல்வேறு பணிகளின் பொருட்டு வெளியில் வருவோர் குடைபிடித்தவாறும், மழை கோட்டுகளை அணிந்து கொண்டும் சென்று வருகின்றனர்.

Tags

Next Story