குமரியில் வெளுத்து வாங்கிய கன மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியில் வெளுத்து வாங்கிய கன மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, சுசீந்திரம், இரணியல், அருமநல்லூர், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாய தேவைகள் நிறைவேறுவதோடு குடிநீர் பற்றாக்குறையும் தீரும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
the future of ai in healthcare