/* */

தனியார் கட்டுமான நிறுவனத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல்

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்றுவரை மேற்கொண்ட சோதனையில் 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3ம் நாளானா இன்று மேலும் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக பேருந்து, திருமணமண்டபம், மசாலா தயாரிப்பு என பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்று செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு சொந்தான அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரண்டாம் நாள் சோதனையின் போது கணக்கில் வராத 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் நாளான இன்று மேலும் கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் ஒப்பந்தமான கட்டுமான தொழில் செய்ததில் கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனை மேலும் நீடிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.

Updated On: 16 Dec 2020 11:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!