ஏப்ரல் 2 பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா

ஏப்ரல் 2 பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா
X

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்

புகழ்பெற்ற பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது

கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூஜை, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு கொடியேற்றம், பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு மலர் பல்லாக்கு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

28-ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 29-ம் தேதி யாகசாலை, பூஜை பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, பூத வாகனம், சிம்ம வாகனத்தில் பட்டீசுவரர் திருவீதி உலா,

30-ம் தேதி யாக சாலை பூஜை, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, 31-ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவர் அருட்காட்சி நடக்கிறது.

1-ம் தேதி யாகசாலை பூஜை, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, வெள்ளை யானை சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

2-ம் தேதி யாகசாலை பூஜை, பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

3-ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு வேடுபரி உற்சவம், 4-ம் தேதி யாகசாலை பூஜை, 5.30 மணிக்கு இந்திர விமான தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

5-ம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திரு விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story