உலக கோப்பை தகுதி சுற்றில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே! 400 ரன்களைக் கடந்து அசத்தல்!

2023ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கான கடைசி இரண்டு அணிகளைத் தேர்வு செய்யும் வகையில் உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கோப்பைத் தொடரில் விளையாடத் தகுதி பெறும்.
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வேயுடன் அமெரிக்க அணி மோதியது. டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்ய, பலம் வாய்ந்த ஜிம்பாப்வே அணி பேட்டிங்கில் ருத்ரதாண்டவமாடியது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாய்லார்ட் 78 ரன்களும் கேப்டன் சியான் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடி 174 ரன்கள் எடுத்தார். சிக்கந்தர் ராசா 48 ரன்கள் எடுத்திருந்தார். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 408 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதன்முறையாக 400 ரன்களைக் கடந்த அணி எனும் சாதனையை படைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் வீரர்கள் முழுமையாக நிற்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். கடகடவென விக்கெட்டுகளை இழந்த அமெரிக்க அணி 25 ஓவர்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவும் ஒரு வகையில் உலக சாதனையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu