கேப்டனுக்கே 600 ரூபாய் தானாம்! உலககோப்பை வென்ற அணி வீரர்களின் அப்போதைய சம்பளம் இதோ!

ஐசிசி உலக கோப்பை போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையில், கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பைக்கு சென்ற அணியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு முதன்முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றியது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் கடந்த முறை இந்தியா அரையிறுதியில் தோற்று வெளியேறியது. அந்த தடவை இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.
இதனிடையே, முதல்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்பட்டது, தினமும் பேட்டா எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் இந்திய அணி முதன்முறையாக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தது. மிகவும் பலம் வாய்ந்த அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
நமீபியா அணி ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற ஒப்பீடு இதற்கு சரியானதாக பொருந்தும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு இந்திய அணியின் நம்பிக்கை மிகக் கடுமையானதாக இருந்தது. கபில்தேவ் மட்டுமே அணியை மிகவும் கட்டுக்கோப்பாகவும் நம்பிக்கையுடனும் வழிநடத்தினார்.
கபில் தேவ் தலைமையில் ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சயீத் கிர்மானி, பல்விந்தர் சந்து, கிர்த்தி ஆசாத், மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், சுனில் வால்சன் உள்ளிட்டோர் அணியில் இடம்பிடித்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu