Dhoni in IPL 2024 அடுத்த சீசன் ஆடுவேனா? அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும் தோனியின் பதில்! ஆனால்?

Dhoni in IPL 2024 அடுத்த சீசன் ஆடுவேனா? அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும் தோனியின் பதில்! ஆனால்?
X
ஐபிஎல் 2023 தொடருக்கான வெற்றிக் கோப்பையைக் கையில் வாங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அடுத்த சீசனும் தோனி விளையாடுவாரா என்பதை கேட்கத் துவங்கிவிட்டனர் தோனியின் ரசிகர்கள். இந்த கேள்வியை அவரிடமே கேட்டபோதும் அதற்கான உறுதியான தகவலைக் கூறாமல் எமோசனலாக பதில் கூறிச் சென்றார் தோனி.

ஐபிஎல் 2023 தொடருக்கான வெற்றிக் கோப்பையைக் கையில் வாங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அடுத்த சீசனும் தோனி விளையாடுவாரா என்பதை கேட்கத் துவங்கிவிட்டனர் தோனியின் ரசிகர்கள். இந்த கேள்வியை அவரிடமே கேட்டபோதும் அதற்கான உறுதியான தகவலைக் கூறாமல் எமோசனலாக பதில் கூறிச் சென்றார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை சென்னை அணிக்கு பெற்றுத் தந்தார் ரவீந்திர ஜடேஜா. அவரைத் தூக்கி கொண்டாடினார் தோனி. இது கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வாழ்நாளிலேயே பார்த்திராத ஒரு கண்கொள்ளா காட்சி. என்னது நம்ம தல வெற்றிய செலிபிரேட் பண்றாரா என்பதுதான் நிறைய பேரு இணையதளத்தில் எழுப்பி வரும் கேள்வி.


கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனும்போது அதனை லாவகமாக பவுண்டரிக்கு தட்டி விட்டு வெற்றியை குஜராத்திடமிருந்து பறித்தார் ஜடேஜா. கடைசி பந்தை வீசும்போது தோனி, மேட்ச்சை பார்க்காமல் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் பதற்றதமாக இருந்ததை கேமராக்கள் படமெடுத்தன. ரசிகர்களும் இது நம்ம தலயா என்று ஆச்சர்யப்பட்டனர்.

இதேபோல ஜடேஜா பவுண்டரி அடித்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று தெரிந்ததும் தோனி மைதானத்துக்குள் சற்று வேகமாக நடந்து அங்கு வந்த ஜடேஜாவை தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுவரை 4 முறை கோப்பையைக் கைப்பற்றியிருக்கும் தோனி இந்த முறை போல எப்போதும் கொண்டாடியதில்லை.


இந்நிலையில் 5வது முறை கோப்பையை வென்ற நிலையில் அவருக்கு இது உணர்வுப்பூர்வமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். காரணம் இதுதான் அவரது கடைசி சீசன். இதன்பிறகு களமிறங்கி ஆட வாய்ப்பில்லை. அதனால்தான் அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டார் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

அதேநேரம் தோனியிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ரசிகர்களின் அன்புக்கு உணர்ச்சிவசப்பட்டேன். அவர்கள் என் பெயரை உச்சரிக்கும்போது கண்களில் நீர் நிறைந்தது. இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் இவை நடக்கும். திரும்பவும் போட்டிகளில் விளையாடலாம் என்று நினைக்கிறேன். எதுவானாலும் நடக்கலாம்.


நான் நானாக இருப்பதால் மக்கள் என்னை நேசிப்பதாக நினைக்கிறேன். ஐபிஎல் மாதிரியான ஆட்டங்களில் மக்கள் தாங்களே களத்தில் இறங்கி ஆடுவதாக உணர்கிறார்கள். ஒவ்வொருவரையும் மற்றவர்களை விட தங்களை என்னுள் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் என்பதே என்மீதான இந்த அன்புக்கு காரணம் என நான் கருதுகிறேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் இப்படி இல்லை என இல்லாத ஒன்றை சித்தரிக்கவும் முயற்சி செய்யவில்லை. எல்லாவற்றையும் எளிமையாகவே வைத்திருக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அவர் அடுத்த சீசன் விளையாடுவார் என்று சொல்லப்பட்டாலும் மக்கள் தன் மீது அன்பு செலுத்துவார்கள் என்பதைதான் அப்படி சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் மற்றவர்கள். 9,10 மாதங்கள் இதற்காக உடலை தயார்படுத்தி பயிற்சி எடுத்து அடுத்த ஆண்டு ஆட முடியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பதுபோலத் தான் தோனி கூறியிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.


will dhoni play ipl 2024அதேநேரம் இப்போது ஏன் அவர் விடைபெறவில்லை என்றால், இந்த வெற்றியைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது ரிட்டயர்டுமெண்ட் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால்தான் எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எந்த ஒரு விசயத்தையும் பெரியதாக அலட்டிக் கொள்ளாமல் செய்யும் தோனி தனது ஓய்வு அறிவிப்பையும் ஏதோ ஒரு சாதாரண நிகழ்வாகவே அறிவிக்க விரும்புவார். அதனால் இப்போது அறிவிக்காமல் இந்த ஆண்டு இறுதியில் சாதாரண அறிவிப்பாக வெளியிடுவார் என்கிறார்கள். எது எப்படியோ தோனி கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராகவோ, அல்லது அணியின் முக்கிய பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்தினாலோ கூட அவர் மீதான அன்பு எப்போதும் அப்படியே இருக்கும்.

Tags

Next Story