டாஸ் வென்றால் சிஎஸ்கே என்ன செய்யும்? பேட்டிங்கா? பவுலிங்கா?

டாஸ் வென்றால் சிஎஸ்கே என்ன செய்யும்? பேட்டிங்கா? பவுலிங்கா?
X
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றால் அடுத்து என்ன நடக்கும்?

ஐபிஎல் 2023 தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை பரிசளிக்கப்படும். இந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை ஒரு 20-20 மேட்ச் ஆடி வரும் நிலையில், டாஸ் வென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்யுமா பவுலிங் தேர்வு செய்யுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இறுதிப்போட்டி தினத்தின் காலை முதலே அவ்வப்போது மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. டாஸ் போடும் சற்று முன்பு பெய்த கனமழையால் ஆடுகளம் ஈரமாகி, பின் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. இன்று மழை பெய்து போட்டி ரத்தாகி, நாளை ரிசர்வ் நாளிலும் மழை பெய்து போட்டி நடக்காமல் போனால் சென்னை அணியின் வெற்றி பறிக்கப்படும் என்றே தெரிகிறது. காரணம் டாப்பில் இருக்கும் குஜராத் அணிக்கு போட்டியின்றி வெற்றி கோப்பை அளிக்கப்படும் என்கிறார்கள்.

ஐபிஎல் 2023 தொடரின் கடைசி நாள் இன்று. இறுதிப் போட்டி இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்தது. டாஸ் போடும் நேரம் மழை பிய்த்துக் கொண்டிருக்க, டாஸ் நேரம் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மழை பொழிந்துகொண்டே இருப்பதால் போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இறுதிப் போட்டி 9.40 மணிக்கு துவங்கினால் எந்த ஓவர் குறைப்பும் இல்லாமல், 20 ஓவர்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி முழு ஆட்டமும் நடைபெறும் என்றால் முதலில் டாஸ் வெல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு நேரம் மழை பொழிந்திருப்பதால் ஆடுகளம் ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கும். இதனால் பவுலிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதுமட்டுமின்றி ஓவர்கள் குறைக்கப்படும்போது இரண்டாவது பேட்டிங்கின் போது டக்வொத் லூயிஸ் முறைப்படி எவ்வளவு அடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே கணக்கிடப்படும்.

ஒருவேளை இந்த போட்டி அப்போது துவங்காமல் மழை தொடர்ந்து கொண்டிருந்தால் ஓவர்கள் அதற்கு ஏற்ப குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஓவர்கள்

நள்ளிரவு 12.06 மணிக்கு ஒருவேளை போட்டி துவங்கும் பட்சத்தில் இது 5 ஓவர்கள் போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் டாஸ் வெல்லும் அணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது போட்டி தொடங்கி நடைபெற்றால் டாஸ் வென்ற அணி முதலில் பவுலிங் தான் தேர்வு செய்யும். முதலில் பேட்டிங் ஆடும் அணியை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டு இரண்டாவது ஆடி அதிக ரன்களை எடுக்க திட்டமிடும்.

அப்போதும் மழை குறுக்கிட்டு இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லாத பட்சத்தில் நாளை ரிசர்வ் தினத்தில் போட்டி அறிவிக்கப்படும். அப்போதும் மழை பெய்து போட்டி திட்டமிட்டபடி நடக்காத பட்சத்தில்தான் குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

குஜராத் அணி அதிக போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் 10 அணிகளில் சிறந்த அணியாக குஜராத் அணியைக் கருதி அந்த அணிக்கு கோப்பையை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

Tags

Next Story