/* */

தேசிய தடகளத்தில் தங்கம் - சீர்காழி அரசு கல்லூரி மாணவியருக்கு வரவேற்பு

தேசியளவில் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சீர்காழி அரசு கல்லூரி மாணவிகளுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய தடகளத்தில் தங்கம் - சீர்காழி அரசு கல்லூரி மாணவியருக்கு வரவேற்பு
X

தேசிய அளவில் தடகளத்தில் தங்கம் வென்ற, புத்தூர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அனுப்பிரியா, ராஜேஸ்வரி. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரில், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், அண்மையில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றனர். 100 மீட்டர் பிரிவில் அனுப்பிரியா என்ற மாணவியும், 5000 மீட்டர் பிரிவில் ராஜேஸ்வரி என்ற மாணவியும் தங்கப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டும் விதமாக, புத்தூர் கடைவீதியில் இருந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக, மாணவிகளுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மேளதாளங்களுடன் ஊர்வலமாக கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். கல்லூரி நுழைவு வாயிலில், பேராசிரியர் மற்றும் மாணவ,மாணவிகள் இருபுறமும் வரிசையில் நின்று கைத்தட்டி வாழ்த்தி, தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

Updated On: 25 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!