/* */

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
X

கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி மேலாண்மைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 1327 பள்ளிகளில் இக்கூட்டம் நடந்தது. இதில், பெற்றோர் - ஆசிரியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினீத் பஞ்கேற்றார்.

அங்கு நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினித் பேசுகையில், பள்ளிகளுக்கு குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் அனுப்ப வேண்டும். காலதாமதம், பதற்றமின்றி குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களை என்.சி.சி. - என்.எஸ்.எஸ் விளையாட்டு போட்டி போன்றவற்றில் சேர்த்து விடலாம்.

தற்போது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. எனவே, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் பெருந்தொற்று வழிகாட்டுதல்கள், கல்வித்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Updated On: 21 March 2022 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?