ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது, இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

ஒருநாள் தொடரை  இந்தியா கைப்பற்றியது, இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
X
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ,, 2 - 1  என்கிற கணக்கில் தொடரைக்  கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது, 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிப் பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும்,

2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.இலங்கை இந்தியாவிடம் வெற்றிப் பெறவேண்டும் என்ற நோக்கில் காத்திருந்தது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே 3வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டி மழையின் காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பேட்டிங் செய்த இந்திய அணி 47 ஓவரில் 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்திருந்தனர்.

மீண்டும் மழை பெய்ததால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி இரண்டாவது பேட்டிங்கில் ஜேசிங் செய்தது.

அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 76 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்ச 65 எடுத்திருந்த போது அவுட்டானார். இந்திய அணியால். இலங்கை அணிக்கு எக்ஸ்ட்ராஸ் ரன்கள் மட்டுமே 30 ரன்கள் கிடைத்தது.

இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், சகாரியா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products