சுப்மன் கில் இன்னிக்கும் சதமடிப்பார்! இறுதி போட்டில இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கா?

சுப்மன் கில் இன்னிக்கும் சதமடிப்பார்! இறுதி போட்டில இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கா?
X
குவாலிபஃயர் போட்டியிலும் மும்பையுடன் ஆடிய ஆட்டத்தின்போது ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டது நினைவிருக்கலாம். அடுத்து ஆடிய சுப்மன் கில் மும்பை பந்து வீச்சாளர்களையே மிரள வைக்கும் ஆட்டத்தை ஆடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியிலும் சுப்மன் கில் சதமடிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த மழைதான் என்கிறார்கள். வரலாற்றை திரும்பி பார்க்கும்போது அது உண்மைதான் என்பது போல இருக்கிறது. கடந்த 2 முறை சுப்மன் கில் சதமடித்தபோதும் மழை பெய்து ஆட்டம் முதலில் பாதிக்கப்பட்டது பின் தாமதமாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டி மே 28 ஞாயிற்றுக் கிழமை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடாத மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ரிசர்வ் தினமான இன்று அந்த ஆட்டத்தை ஒத்தி வைத்தது நிர்வாகம். இதனால் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி தங்களில் யார் கோப்பையை வெல்ல தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்வார்கள். அந்த வகையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கைகளே ஓங்கி இருக்கும் என்று கூறப்படுகிறது.

10 அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வெளியேறிவிட, மீதமுள்ள 8 அணிகளுக்குள்ளேயே பலத்த போட்டி இருந்தது. அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஆட்டங்களில் வெற்றியடைந்ததால் மற்ற அணிகளுடன் போட்டியிடாமல் நேரடியாக முதல் இடத்தைப் பிடித்தது. சென்னை அணி கொஞ்சம் திணறினாலும் 2வது இடத்தை பிடிக்க அவ்வளவு பெரிய பாடுபடவில்லை என்றும் சொல்லலாம்.

3வது மற்றும் 4 வது இடங்களைப் பிடிக்க 6 அணிகள் கடுமையான போட்டிகளை சந்தித்தன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என ஆறு அணிகள் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் குஜராத் புண்ணியத்தால் மும்பை அணியும், மழையின் புண்ணியத்தால் லக்னோ அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

குவாலிபஃயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. குஜராத் அணி குவாலிபஃயர் 2வுக்கு சென்றது.

எலிமினேட்டரில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோத அதில் மும்பை வெற்றி பெற்றது. குவாலிபஃயர் 2வில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. அதில் சுப்மன் கில் அடித்த காட்டடியால் குஜராத் அணி எளிமையாக வென்று இன்று சென்னை அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.

இப்போது விசயம் என்னவென்றால் இறுதிப்போட்டியில் சுப்மன் கில் மீண்டும் சதமடிப்பார். அவருக்கு இதுதான் ராசி என்று கூறி ரசிகர்கள் பல செய்திகளை இணையத்தில் உலாவ விடுகின்றனர். கடைசி லீக் போட்டியில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட, அந்த ஆட்டத்தில் வெறித்தனமாக ஆடிய சுப்மன் கில் சதமடித்தார்.

குவாலிபஃயர் போட்டியிலும் மும்பையுடன் ஆடிய ஆட்டத்தின்போது ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டது நினைவிருக்கலாம். அடுத்து ஆடிய சுப்மன் கில் மும்பை பந்து வீச்சாளர்களையே மிரள வைக்கும் ஆட்டத்தை ஆடினார்.

இந்நிலையில், இன்றும் மழை பெய்யும் என்று கூறுகிறார்கள். அப்ப சுப்மன் கில் அடுத்த சதத்துக்கு தயாரா இருக்கார் போலயே?

Tags

Next Story