/* */

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உருக்கமாக நன்றி

ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார்.

HIGHLIGHTS

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உருக்கமாக நன்றி
X

கிரிக்கெட் விளையாட்டில் 15 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்த ரோகித் சர்மா.

விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவருக்கு வயது 34. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 ஆண்டுகளை ரோகித்சர்மா இன்று நிறைவு செய்துள்ளார்.

கடந்த 2007 ம் ஆண்டில் இதே நாளில்தான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக ரோகித் சர்மா அறிமுகமானார்.

கிரிக்கெட் விளையாட்டில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த ரோகித் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது :நான் இந்தியாவுக்காக அறிமுகமாகி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறேன். நிச்சயமாக இந்த பயணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. மேலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நான் சொல்லி கொள்வது எல்லாம், உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் எங்களுக்கு சவால்களை சமாளிக்க உறுதுணையாக உள்ளது. இவ்வாறு ரோகித்சர்மா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 Jun 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்