ரிஷப் பந்த்தின் கார் தீப்பிடித்து பயங்கர விபத்து.. மருத்துவமனையில் அனுமதி

ரிஷப் பந்த்தின் கார் தீப்பிடித்து பயங்கர விபத்து.. மருத்துவமனையில் அனுமதி
X
உத்தரகாண்டில்இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் திரும்பிய போது பெரும் விபத்தில் சிக்கினார்.

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலைக்கு அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையான ஹம்மாத்பூர் ஜால் அருகே ரிஷப் பந்த்தின் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. ரிஷப் பந்த் அவரே மெர்சிடிஸ் காரை ஓட்டிச் சென்றதாகவும், விபத்து நடந்த போது பேட்ஸ்மேன் காரில் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் கூறுகையில், எரியும் காரில் இருந்து வெளியே வர கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. மோதலின் விளைவாக, அவருக்கு தலை, முழங்கால் மற்றும் தாடையில் காயங்கள் உள்ளன. அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து பந்த் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பந்த் பூரண குணமடைந்து விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்த் ஒருநள் போட்டியிலும் டி20 போட்டிகளிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் காயமடைந்தாரா, ஓய்வெடுத்தாரா அல்லது கைவிடப்பட்டாரா என்பதை பிசிசிஐ இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு திரும்புவதற்கு முன்பு பங்களாதேஷில் நடந்த ஒருநாள் போட்டிகளிலும் இடம்பெறவில்லை.

Tags

Next Story
why is ai important to the future