ராஜஸ்தான் அணி வெற்றி! டல் அடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு !

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் முதலில் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் அவுட் ஆக ஷிகர் தவான் 17 ரன்களுடனும், அதர்வா தய்டே 19 ரன்களுடனும் அவுட் ஆகி வெளியேறினர். லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன்களில் அவுட் ஆகினர். அதன்பிறகு களமிறங்கிய சாம் கரண், ஜிதேஷ் சர்மா இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.
சாம் கரண் கடைசி வரை அவுட் ஆகாமல் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்திருந்தார். ஜிதேஷ் சர்மா 28 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். 3 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் எடுத்திருந்தார். ஷாருக் கான் தன் பங்குக்கு அவுட் ஆகாமல் 2 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி வெளியேறினாலும் அதன் பிறகு வந்த படிக்கல் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார்.
ஷிம்ரன் ஹெட்மயர் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி நேரத்தில் அவுட் ஆனார். 19.4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu