/* */

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் தொடரில் இருந்து ராகுல் டிராவிட் அணிக்கு பொறுப்பேற்பார்.

HIGHLIGHTS

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
X

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் டிராவிட் அணிக்கு பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளுடன் நிறைவடைகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனைக் குழு ராகுல் டிராவிட்டை டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. முன்னாள் இந்திய கேப்டன் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து பொறுப்பேற்பார். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரவி சாஸ்திரி மற்றும் மற்ற பயிற்சியாளர் ஊழியர்களின் வெற்றிகரமான பதவிக்காலத்திற்காக, அணி பல உயரங்களை எட்டியதற்காக வாழ்த்தியது.

அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது தனக்கு கிடைத்த "மிகப்பெரிய கௌரவம்" என்று டிராவிட் கூறினார்.

"இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கெளரவம். நான் இந்த பொறுப்பை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். ரவி சாஸ்திரியின் கீழ், அணி சிறப்பாக செயல்பட்டது, மேலும் அணியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். இந்தய கிரிக்கெட் அகாடமி, அண்டர்-19 மற்றும் இந்திய 'ஏ' அணிகளில் பெரும்பாலான இளம் வீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் அவர்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியும். வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் " என்று டிராவிட் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

டிராவிட்டின் முன்னாள் சக வீரரும், பிசிசிஐயின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, புதிய பொறுப்பிற்கு டிராவிட்டை வரவேற்று, நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

Updated On: 4 Nov 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?