விடாத மழை.. அப்ப கப்பு குஜராத்துக்குதானா? என்னங்க சொல்றீங்க?

விடாத மழை.. அப்ப கப்பு குஜராத்துக்குதானா? என்னங்க சொல்றீங்க?
X
குஜராத் அணி அதிக போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் 10 அணிகளில் சிறந்த அணியாக குஜராத் அணியைக் கருதி அந்த அணிக்கு கோப்பையை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி இன்று விளையாடி கோப்பையை வெல்லும் என கனவு கண்டுகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டுக்கான கோப்பை குஜராத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதற்காக மனது விட்டுவிடவேண்டாம். இன்று மழை பெய்து போட்டி ரத்தாகி, நாளை ரிசர்வ் நாளிலும் மழை பெய்து போட்டி நடக்காமல் போனால் மட்டுமே அப்படி நடைமுறையாம். அதற்கு முன்னதாக சென்னை அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாகவும் இருக்கிறது.

ஐபிஎல் 2023 தொடரின் கடைசி நாள் இன்று. இறுதிப் போட்டி இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்தது. டாஸ் போடும் நேரம் மழை பிய்த்துக் கொண்டிருக்க, டாஸ் நேரம் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மழை பொழிந்துகொண்டே இருப்பதால் போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இறுதிப் போட்டி 9.40 மணிக்கு துவங்கினால் எந்த ஓவர் குறைப்பும் இல்லாமல், 20 ஓவர்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த போட்டி அப்போது துவங்காமல் மழை தொடர்ந்து கொண்டிருந்தால் ஓவர்கள் அதற்கு ஏற்ப குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

நள்ளிரவு 12.06 மணிக்கு ஒருவேளை போட்டி துவங்கும் பட்சத்தில் இது 5 ஓவர்கள் போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் டாஸ் வெல்லும் அணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற அணி முதலில் பவுலிங் தான் தேர்வு செய்யும். முதலில் பேட்டிங் ஆடும் அணியை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டு இரண்டாவது ஆடி அதிக ரன்களை எடுக்க திட்டமிடும்.

அப்போதும் மழை குறுக்கிட்டு இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லாத பட்சத்தில் நாளை ரிசர்வ் தினத்தில் போட்டி அறிவிக்கப்படும். அப்போதும் மழை பெய்து போட்டி திட்டமிட்டபடி நடக்காத பட்சத்தில்தான் குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

குஜராத் அணி அதிக போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் 10 அணிகளில் சிறந்த அணியாக குஜராத் அணியைக் கருதி அந்த அணிக்கு கோப்பையை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

Tags

Next Story