போட்டி நடக்கல... ஆனா தங்கம் இந்தியாவுக்கு..! இது எப்படிங்க?

போட்டி நடக்கல... ஆனா தங்கம் இந்தியாவுக்கு..! இது எப்படிங்க?
X
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடாமலே வெற்றியை தனதாக்கியது எப்படி தெரியுமா? அதனை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடாமலே வெற்றியை தனதாக்கியது எப்படி தெரியுமா? அதனை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும் இந்திய அணிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி அரையிறுதிப் போட்டியைப் போன்றே இந்தப் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஷாபாஸ் அஹ்மத், ரவி பிஷ்னோய் என நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கியது. ஆனால், அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. நான்கு ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னோய் மட்டுமே சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் ஸ்பின் பந்துவீச்சில் ரன் குவிப்பது சிரமம் என்பதாலேயே இந்திய அணி இந்த முடிவை எடுத்தது. அதே சமயம், அதிக ரன்களை முதலில் ஆடும் ஆப்கானிஸ்தான் எடுத்து விட்டால் அது இந்திய அணிக்கு சேஸிங்கில் சிக்கலை உருவாக்கும் என்ற நிலையும் இருந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 23 ரன்களை வாரிக் கொடுத்தார். சாய் கிஷோர் 4 ஓவர்களில் 26 ரன்களை கொடுத்தார். இரண்டு தமிழக வீரர்களுமே அரையிறுதியில் மற்ற வீரர்களை விட சிறப்பாக பந்து வீசி இருந்த நிலையில், இந்தப் போட்டியில் அவர்கள் சொதப்பினர். இருவருமே விக்கெட்டும் எடுக்கவில்லை.

மழை வரும் வரை நடைப்பெற்ற ஆட்டத்தில் ஷாபாஸ் அஹ்மத் இவர்களைக் காட்டிலும் மோசமாக பந்து வீசி 3.2 ஓவரில் 28 ரன்களை கொடுத்து இருந்தார். எனினும், அவர் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ரவி பிஷ்னோய் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். சிவம் துபே 1 ஓவர் வீசி 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை வந்ததால் போட்டி தடைபட்டது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவுக்கு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை உருவாக்கி விட்டனர் பந்துவீச்சாளர்கள்.

மழை மறைந்து போட்டி மீண்டும் தொடங்கினால், இந்தியாவுக்கு 6 ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு 112 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஆனால், போட்டி மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டதால், கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு கைகூடவில்லை. ஸ்பின்னர்கள் சொதப்பினர். வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்கள் எடுத்து நல்ல நிலைக்கு வந்தது. ஆனால், மழை வந்ததால் போட்டி தடைபட்டது. போட்டி கைவிடப்பட்டிருந்த நிலையிலும், இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. அது எப்படி என பலரும் யோசிப்பீர்கள். அது ராங்கிங் அடிப்படையில் முன்னிலையிலிருந்த இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டது.

Tags

Next Story