இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துமா இந்தியா? இன்று மோதல்!

இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துமா இந்தியா? இன்று மோதல்!
X
ஆசிய கோப்பையில் இந்தியா இலங்கை இன்று மோதல்!

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்த முனைப்பு காட்டுகின்றன.

மைதானம்

பிரேமதாசா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் முதலில் விளையாடும் அணி, மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். டெத் ஓவர்களில் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு

இன்றைய போட்டியின் போதும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. எனவே, இரு அணிகளும் மழை குறுக்கீடு இல்லாமல் முழுமையாக விளையாடும் வாய்ப்பை பெற்று, வெற்றிப்பெற முனைப்பாக செயல்பட வேண்டும்.

இந்திய அணி

ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளுமே, மழையால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தான் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் உடனான முதல் லீக் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரோகித் சர்மா, சுப்மன் கில், கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். குறிப்பாக அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா உத்தேச அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்)

சுப்மன் கில்

விராட் கோலி

கே.எல். ராகுல்

இஷான் கிஷன்

ஹர்திக் பாண்டியா

ரவீந்திர ஜடேஜா

ஷர்துல் தாக்கூர்

குல்தீப் யாதவ்

முகமது சிராஜ்

ஜஸ்பிரித் பும்ரா

இலங்கை அணி

தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அணி, வெற்றிப்பயணத்தை தொடர தீவிரம் காட்டும். போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இலங்கை உத்தேச அணி:

பதும் நிஸ்ஸங்க

திமுத் கருணாரத்ன

குசல் மெண்டிஸ் ,

சதீர சமரவிக்ரம,

சரித் அசலங்கா,

தனஞ்சய டி சில்வா,

தசுன் ஷனகா,

துனித் வெல்லலகே,

மஹீஷ் தீக்ஷன,

கசுன் ராஜித,

மதீஷ பத்திரன

இன்று நடைபெறும் போட்டி, இரு அணிகளின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முக்கிய போட்டியாகும். எனவே, இரு அணிகளும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி, வெற்றிப்பெற முனைப்பாக செயல்பட வேண்டும்.

பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்தது என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். சதாப் கான் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த ரோஹித் சர்மா அதனை பகீம் அஷ்ரப் கையில் கொடுத்து அவுட் ஆனார். அவர் 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

18வது ஓவரில் சுப்மன் கில் ஷகீன் அப்ரடி பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். சுப்மன் கில் 10 பவுண்டரிகளை விரட்டியிருந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே எல் ராகுல். இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஷகீன் அஃப்ரடி, நசீம் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஹரிஸ் ரஃப் என அடுத்தடுத்து அனைவரது பந்து வீச்சையும் அடித்து நொறுக்கினர்.

மிக விரைவாக ஆடிய விராட் கோலி அவ்வப்போது கே எல் ராகுலுக்கு ஆட்டத்தை கொடுத்து வந்தார். கே எல் ராகுல் தனது 6 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சற்று நேரத்தில் விராட் கோலியும் அதிரடியாக சதமடித்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்து மிக கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

3 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடித்து 94 பந்துகளில் 122 ரன்களைக் குவித்திருந்தார் விராட் கோலி. கே எல் ராகுல் தன் பங்குக்கு 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 106 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருவரும் களத்தில் இருந்தனர். 50 ஓவர்களில் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் - இமாம் உல் ஹக் ஜோடி ஓபனிங் வீரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் தனது சுழலில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags

Next Story