/* */

கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

HIGHLIGHTS

கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா
X

ஒரு நாள் கிரிக்கெட் கடைசி போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்றது.

இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் கடைசி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹெட் 33 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டேவிட் வார்னர் மிட்செல் மாட்ஷ் உடன் இணைந்தார். ‘

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ஷ் 47 ரன்னிலும், வார்னர் 23 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய லபுஸ்சாக்னே 28 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து சீன் அப்போட், ஆஷ்டன் அகர் இணை ஜோடி சேர்ந்தது. இறுதியில் அந்த அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 47 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், டிராவிஸ் ஹெட் 33 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் ரோகித் 30 ரன்களில் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து ரோகித் சர்மா களமிறங்கினார். இதனிடையே சுப்மன் கில் 37 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரைசதத்தைக் கடந்த ரோகித் சர்மா 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கே.எல்.ராகுல் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரையும் வென்று உள்ளது.

Updated On: 24 March 2023 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...