மலேசியாவைப் பந்தாடிய இந்திய அணி! வேற லெவல் ஆட்டம்!

மலேசியாவைப் பந்தாடிய இந்திய அணி! வேற லெவல் ஆட்டம்!
X
மலேசிய அணியைப் பந்தாடிய இந்திய ஹாக்கி அணி

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி போட்டித் தொடரில் மலேசியா அணியை பந்தாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மலேசிய அணியுடன் மோதியது இந்திய ஹாக்கி அணி. ஆரம்பம் முதலே கடுமையான தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு முதல் பாதியில் ஒரு கோல் மட்டுமே கிடைத்தது.

மலேசிய அணி கோல் எதுவுமின்றி இருக்கையில் 1 கோலுடன் இரண்டாவது பாதிக்குள் நுழைந்தது இந்திய அணி. இரண்டாவது பாதியில் இந்திய அணி ஆட்டத்தை தன் கையில் எடுத்தது. அதிரடியாக விளையாடிய வீரர்கள் பந்தை எதிரணி கோட்டையிலே வைத்திருந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

32 வது நிமிடத்தில் ஹர்திக் சிங், 42 வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் கோல் அடிக்க 3 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது இந்திய அணி. இதனால் எப்படியாவது ஆட்டத்தை துரத்திப் பிடிக்க வேண்டும் என்று மலேசிய அணி வீரர்கள் முனைப்பு காண்பிக்க வேகம் சூடுபிடித்தது. இதனால் மலேசிய வீரர்கள் சில தவறுகளைச் செய்தனர். 53, 54வது நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடிக்க மொத்தம் 5 - 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

Tags

Next Story