/* */

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சபதம் போட்ட ரசிகை கிண்டலுக்கு ஆளானர்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் சபதம் போட்ட ரசிகை

HIGHLIGHTS

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சபதம் போட்ட ரசிகை கிண்டலுக்கு ஆளானர்
X

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ரசிகை போட்ட சபதம் மைதானத்தில் அனைவர் கனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஸ்டார் அந்தஸ்து அடைந்த அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. அதற்கு காரணம் கோலி, கெயில், டிவில்லியர்ஸ் என பல அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆர்சிபி அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆனால், இத்தனை இருந்தும் இதுவரை ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பை வாங்கியது இல்லை. இதன் காரணமாக விராட் கோலி தனது கேப்டன் பதவியையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்சிபி அணி புத்த்புது தோற்றம் மற்றும் புதிய கேப்டனுடன் ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்குகியது. பேட்டிங், பந்துவீச்சு என மிரட்டுவதால், புதிய கேப்டனான டுபிளஸிஸ், இம்முறை கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியின் தாரகமந்திரமான ஈ சாலா கம் நம்தே, இம்முறையாவது நிறைவேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆர்சிபி லீக் ஆட்டத்தில் ரசிகை ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக பெண்கள், விராட் கோலி ஐ லவ் யு , என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று தானே பதாகையில் எழுதி ஏந்தி காட்டுவார்கள். ஆனால் இங்கு ஒரு பெண் சபதம் போட்டுள்ளார். அதாவது, ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த பெண் பதாகையில் எழுதியுள்ளார். தற்போது அந்த பெண், சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆர்சிபி அணியை பிடிக்காத பலரும் அந்த பெண்ணை கலாய்த்து வருகின்றனர்.

Updated On: 13 April 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!