சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ஆஸி. வீரர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் மும்பையில் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவரை ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ தெரியாது ஆனால் இந்திய ரசிகர்கள் இவரை தங்களின் சொந்த அண்ணன் போல கொண்டாடுகின்றனர். காரணம் இவர் ஐபிஎல் விளையாடியபோது ஏற்படுத்திக் கொண்ட நெருக்கம்தான். இவர் மட்டுமின்றி இவரின் குடும்பத்துக்கே இந்தியாவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு இவர் பண்ணிய சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இவ்வளவு பெரிய வீரர் மனதில் இத்தனை குழந்தைத் தனமா என வியந்தவர்களும் உண்டு. டேவிட் வார்னர் உண்மையில் மிகவும் எளிமையானவராக இருக்கிறார். அவருக்கு பெரிய பந்தா எதுவும் இல்லை என ஒவ்வொரு முறை அவர் இந்தியா வரும்போதும் அவரைச் சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.
இப்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருக்கிறார் வார்னர். அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனால் மும்பையில் தங்கியிருக்கும் வார்னர், சிறுவர்களுடன் சேர்ந்து தெருவில் கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்து பலரும் ஏதோ ஒரு வெளிநாட்டவர் என்று நினைத்து சென்றார்கள். சிறுவர்களுக்கு நிச்சயமாக அவர் யார் என்பது தெரிகிறது. அவரிடம் நீங்கள் இந்திய குடியுரிமைப் பெற போகிறீர்களா என்றும் கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் இம்முறை விளையாடாததால் அந்த அணிக்கு வார்னர்தான் கேப்டன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu