உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காள தேசத்தை ஊதி தள்ளியது பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காள தேசத்தை ஊதி தள்ளியது பாகிஸ்தான்

பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பாகிஸ்தான் அணி வீரர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை ஊதி தள்ளி எளிதாக வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதான வெற்றியை பெற்றது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இந்த லீக் தொடரில் முதல் 4 இடங்களை பெறும் பணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வரும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை ஆகும்.

அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இந்த நிலையில் புனேயில் இன்று 31 ஆவது லீக் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானும், வங்காள தேசம் அணியும் மோதின.

முதலில் வங்காள தேசம் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 204ரன்கள் எடுத்திருந்தது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என் என்கிற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே பந்துகளை விளாச தொடங்கினார்கள். அவர்களது அதிரடி ஆட்டத்திற்கு வங்காள தேச அணியின் பௌலர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எளிதாக கடந்தது. எனவே பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளது.

Tags

Next Story