உலக கோப்பை கிரிக்கெட்: முன்னாள் சாம்பியன் இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட்: முன்னாள் சாம்பியன் இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட்: முன்னாள் சாம்பியன் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இந்த லீக் தொடரில் முதல் 4 இடங்களை பெறும் பணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வரும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை ஆகும்.

அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இந்த நிலையில் புனேயில் இன்று 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன் இலங்கையும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது அந்த அணி 241 ரன்கள் எடுத்திருந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என் என்கிற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே நிதானமாக ஆடினார்கள். தொடக்கத்தில் அவர்களுக்கு மூன்று விக்கெட் விழுந்தாலும். அதன் பின்னர் விக்கெட் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் ௩ விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இலங்கையை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story