கிரிக்கெட்: நெதர்லாந்தை 160 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

கிரிக்கெட்: நெதர்லாந்தை 160 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்ரேயஸ் அய்யர்.

உலக கோப்பை கிரிக்கெட்டில்் நெதர்லாந்தை 160 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடை லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் கில் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் இந்த போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித்ஷர்மா, சுப்மன் கில், மற்றும் விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகிய5 வீரர்களும் ஐம்பது ரன்களை தாண்டி உள்ளனர். இப்படி தொடர்ந்து ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரை சதத்தை தாண்டி இருப்பது கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை ஆகும்.

ஸ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல்ஜோடி நங்கூரம் போல் நின்று வருகிற பந்துகளை எல்லாம் சிக்ஸ் மற்றும் பவுண்டரிக்கு விளாசினர். இரண்டு பேரும் சதம் அடித்தனர். இறுதியாக 50 ஓவர்கள் வீசி முடிப்பதற்கு ஒரு பால் முன்னதாக தனது 102 ரன்னில் ராகுல் கேட் அவுட் ஆனார். ஸ்ரேயஸ் அய்யர் 128 ரன்களுடன் அவுட் ஆகாமல் நின்று கொண்டிருந்தார். அந்த வகையில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தினால் நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே சிராஜ் வீசிய பந்தில் விக்கெட் விழுந்தது. அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து நிற்க முடியவில்லை. பும்ரா மற்றும் ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. இறுதியாக 47.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது.லீக் போட்டியில் தோல்வியை தழுவாத ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு உள்ளது.

Tags

Next Story