சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு! வெற்றியை ருசிக்குமா சிஎஸ்கே?

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகி வெளியேறினார். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் துபேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன்பிறகு ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தத் படிக்கல். இருவரும் இணைந்து வானவேடிக்கைகள் காட்டினர். சென்னை அணியின் பந்து வீச்சை சமயம் பார்த்து பவுண்டரி, சிக்ஸர்களுக்கு விரட்டி அடித்தனர். படிக்கல் அதிரடியால் ரன்கள் ஏறுமுகமாக இருந்தன. அதேநேரம் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவர் கொஞ்சம் திணறினார். 9வது ஓவரை வீசிய ஜடஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வந்த வேகத்திலேயே டக்அவுட் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் பிறகு ரன்கள் கொஞ்சம் அதிகமானது. விக்கெட் விழுவது நின்றது. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அவர்களைப் பிரிக்க வந்தார் ஆகாஷ் சிங். அவர் வீசிய 15வது ஓவரில் அஸ்வினும் அவுட் ஆக, அவருக்கு பிறகு களமிறங்கினார் ஷிம்ரன் ஹெட்மயர்.
16 - 20 ஓவர்களில் அதிரடியைக் காட்டும் ஷிம்ரனை அவுட் ஆக்க சென்னை அணி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பட்லர் கூட 52 ரன்களில் அவுட் ஆகிவிட்டார். ஆனால் ஷிம்ரல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 175 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu