சென்னை, காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் கபடி, கேரம், செஸ் போட்டிகள்

சென்னை, காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் கபடி, கேரம், செஸ் போட்டிகள்
X
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் கபடி, கேரம், செஸ் போட்டிகள் இன்று தொடங்கின



பெருந்துறைமுகங்கள் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய கபடி, கேரம், செஸ் போட்டிகள் இன்று (ஏப்ரல் 19) தொடங்கின. ஏப்ரல் 21 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 துறைமுகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு சுனில் பாலிவால் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் உடல் மற்றும் மனநல மேம்பாட்டுக்காக இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் எஸ் பாலாஜி அருண் குமார், காமராஜர் துறைமுகத்தின் பொது மேலாளர் சஞ்சய் குமார், இருதுறைமுகங்களின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னை துறைமுக ஆணையத்தின் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future