/* */

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி மே 18-ல் தொடக்கம்

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டி மே 18 ஆம் தேதி தொடங்குகிறது.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி மே 18-ல் தொடக்கம்
X

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த பதினொரு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டும் அதே போல லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் புது டெல்லி, ஹாக்கி இந்தியாவின் அனுமதியுடன் வருகின்ற மே 18ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.

இப்போட்டியின் துவக்க விழா மே 18ம் தேதி மாலை 5.00 மணி அளவில் நடைபெற உள்ளது. டில்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நடுவர்கள் கலந்து கொண்டு போட்டியை நடத்த உள்ளனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அகில இந்திய அளவில் பல்வேறு அணிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், யூனியன் பேங்க் - மும்பை, ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே - புவனேஷ்வர், கனரா பேங்க் - பெங்களூரு, இந்தியன் பேங்க் - சென்னை, சிஏஜி – புதுடெல்லி மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவுகள் தங்குமிட வசதி, உணவு அனைத்தும் அறக்கட்டளையினரால் வழங்கப்படுகிறது. தினமும் காலை --6.30 மணிக்கு ஒரு போட்டியும் மாலை 4.30 மணிக்கு ஒரு போட்டியும் 06.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 08.15 மணிக்கு ஒரு போட்டியும் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.

போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் இருபதாயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டிக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாசலம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமையில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் காளிதாஸ் முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர் என நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தெரிவித்தார்.

Updated On: 27 April 2023 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!