/* */

2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெறும்

கடந்த 2000 ம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2032 ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெறும்
X

2032ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் கடைசியாக, கடந்த 2000-ஆம் ஆண்டு சிட்னி நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 1956-இல் மெல்போா்ன் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து பிரிஸ்பேன் நகரில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன், 'ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிவோம்' என்றார்.

டோக்கியோவைத் தொடா்ந்து பாரீஸில் 2024-ஆம் ஆண்டும், பின்னா் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 July 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  8. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  10. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...