ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த எல்லா செயல்களும் நிறைவேறும் - தமிழிசை

"ஆஞ்சநேயர் தான் டாஸ்க் மாஸ்டர்" என்றும் அவரை வழி பட்டால் எல்லா செயல்களும் நிறைவேறும் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநவமியை முன்னிட்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: இன்று ராம நவமி சிறப்பான நாளாகும். நான் 30 வருடங்களாக ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரை வழிபட்டு வருகிறேன்."ஆஞ்சநேயர் தான் டாஸ்க் மாஸ்டர்" அவரை வழி பட்டால் எல்லா செயல்களும் நிறைவேறும் என்றார்.
நான் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தபோது எனது கணவருடன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவேன். கணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது இங்கு வழிபட்டேன். மிக முக்கியமான காரியங்களை செய்வதற்கு முன்னால் ஆஞ்சநேயரை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளேன். மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் எனவும் கொரோனா நான்காவது மற்றும் ஐந்தாவது அலை இல்லாத காலமாக இருக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து கொண்டேன். மேலும் மக்கள் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu