/* */

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற விஷு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
X

பிரசித்தி பெற்ற சபரிமலை கோவில் நடை, விஷு பூஜைக்காக திறக்கப்பட்டது. 

கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதங்களில் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பூஜைக்காக கடந்த 10 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை கோவிலில் இன்று கோவிலின் பிரதான தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் விஷு பூஜை மற்றும் கனி தரிசன பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் மாலை அணிந்து இருமுடி கட்டுடன் வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். மாதாந்திர பூஜைகளுக்கு பின்னர் வரும் 18 ஆம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

Updated On: 15 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  4. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  7. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...