palli vilum palan பல்லி விழுந்தால் இத்தனை நல்லது, கெட்ட பலன்களா?

palli vilum palan பல்லி விழுந்தால் இத்தனை நல்லது, கெட்ட பலன்களா?
palli vilum palan பல்லி விழுந்தால் இத்தனை நல்லது, கெட்ட பலன்களா? என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

palli vilum palanகாட்டில் மட்டும் அல்ல வீட்டிலும் நம்முடன் இணைந்து பயணித்து வரும் ஒரு உயிரினம் பல்லி. பல்லி இந்துக்களின் நம்பிக்கையான ஒரு உயிரினமாக கருதப்படுகிறது. பல்லி கத்துவது ஒரு முக்கிய சகுனமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல்லி கத்துவது தங்களது குல தெய்வம் அல்லது தங்களது இஷ்ட தெய்வத்தின் உத்தரவாகவே கருதும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தகைய பல்லி சில நேரங்களில் நமது உடலில் விழுந்து விடுவது உண்டு. நம் உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.


palli vilum palan*அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடியது பல்லி. பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது.

*தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.

palli vilum palan*நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்‌ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.

*புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.

palli vilum palan*அதுவே கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது அர்த்தம்.

*நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

*நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

*பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

*தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

*தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

*வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

palli vilum palan*இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.


*பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது..

*முகத்தில் பல்ல்வி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும

பரிகாரம்

palli vilum palanநம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.

இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குங்கள். அந்த நிலையில் சூரியன் மற்றும் சந்திரன் சித்திரத்தையும் காணலாம்.

இந்த பல்லிகளை வணங்கினால் வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய சோகங்களை நீக்கி, நன்மை கிடைக்கும்.

Tags

Next Story