கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் கந்த சஷ்டி கவசம் படிங்க..... படிச்சு பாருங்க...

கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்   கந்த சஷ்டி கவசம் படிங்க..... படிச்சு பாருங்க...

முருகா சரணம்...முருகா சரணம்...முருகா சரணம்...முருகா சரணம்...முருகா சரணம்...முருகா சரணம்...

kandha sashti kavasam மனித வாழ்க்கையில் பிரச்னைகள் என்பதுஇல்லாமலிருக்காது. ஆனால் நாம் மனதைரியத்துடன் பிரச்னைகளை எதிர்நோக்கும்போது நம்மை விட்டுவிலகிவிடும். மனம் கலங்காமல் எதிர்த்து போராட வேண்டும்....

kandha sashti kavasam

மனிதர்களில் ஒருசிலர் இருக்கிறார்கள். கஷ்டம்னு வந்தா மட்டும் கோயில் கோயிலா சுத்துவார்கள். பின்னர் அந்த கடவுளைக்கூட கண்டுக்க மாட்டார்கள். அதுபோல்சுயநலவாதிகள் இருக்கின்றனர். ஆனால் நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை ஆட்டுவிக்கிறது என்பதை நாம் அனைவருமே உணரவேண்டும். இருக்கிறார், இல்லை என்பது பற்றி பேச்சு இங்குவேண்டாம். அந்த சக்தியானது நம்மைக் கண்காணிக்கிறது என்ற பயத்தோடு நாம் வாழ்ந்தோமானால் நம் வாழ்க்கையானது சிறக்கும்.வாழ்க்கையில் யாருக்கும் பயப்படாவிட்டால் கூட அந்த கடவுளுக்கு பயப்பட வேண்டும்.

இக்கால இளைய தலைமுறைகளுக்கு ஆன்மீக விஷயத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. காரணம் பெற்றோர்கள் கோயிலுக்கு செல்கையில் அவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லவேண்டும். கடவுள் என்பவர் உள்ளார். அவருக்காவது நாம் பயப்படணும் என்ற விதையை அவர்கள் மனதில் போடணும். அப்போதுதான் அவர்களும் கட்டுப்பாடான ஒழுக்க நெறிமுறைகளை அனுசரித்து வாழக்கற்றுக்கொள்வார்கள்.

kandha sashti kavasam


kandha sashti kavasam

கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வோருக்கு எந்த கஷ்டமும் துன்பங்களும் பனி போல்விலகுவதாக அனுபவத்தில் கண்டவர்கள் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் தினமும் காலையில் குளித்த பின் பக்தியுடன் சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வோருக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

முருகன் சூரனை அழித்தல்

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்ஹாரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலைக் கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும்.

கந்த சஷ்டி விரதம்

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

முருகனுக்கு உரிய கோயில்களாக தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த ஆறு கோயில்களுக்கும் சென்று வணங்குவோர்க்கு தேவையான அனைத்து சுபிட்ஷங்களையும் முருகப்பெருமான் அருள்வதாக ஐதீகம். அந்த வகையில் பக்தர்களில் பெரும்பாலானோர் இ ந்த அறுபடைவீடுகளையும் வருடத்தில் ஒரு நாள் தரிசிப்போரும் உண்டு.

மருதமலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருச்செந்துார், பழனி, உள்ளிட்ட மலைக்கோயில்களில் வீற்றிருக்கும் முருகன் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் வருடந்தோறும் இக்கோயில்களுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

kandha sashti kavasam


kandha sashti kavasam

ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூசம் விழாவானது அனைத்து முருகன் கோயில்களிலும் மிக மிக சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து கடவுளுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்துவர். பழனி, திருத்தணி,திருப்பரங்குன்றம், மருதமலை உள்ளிட்ட அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழாவானது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

தமிழர்களின் "காக்கும் கடவுளான" "கந்தனாகிய" "முருகப்பெருமானுக்கு" பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் "கந்த சஷ்டி கவசம்".

கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றி பாடும் கவசம் ஆகும். தேவார சுவாமிகள் இதை நமக்கு அருளினார். கந்த சஷ்டி கவசம் முதன் முதலில் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது என்று கூறப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் அதை முருகப்பெருமான் படத்தின் முன்பு நின்றோ அல்லது முருக பெருமான் கோவில்களிலோ அல்லது அறுகோண சக்கரத்தின் முன்போ பாடலாம்.

முருக பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமைகளிலும் சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த இதர நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம். சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் அதை பாராயணம் செய்தால் எல்லாவற்றுக்கும் தீர்வு ஏற்படும்.

சரி நாம் சப்ஜெக்டுக்கு வந்துடுவோமா? கந்த சஷ்டி கவசம். இதனைக் காலையில் குளித்து விட்டு ஒரு முறை உங்கள் மனதார தெய்வத்தின் முன் நின்று பாடிப்பாருங்கள். இப்போதெல்லாம் எம்பி3 ஆடியோவில் போட்டுவிட்டு அவர்களும் கூட சேர்ந்து பாடுகின்றனர். சரி அது உங்கள் விருப்பம்...நீங்கள் எப்படி பாடினாலும் சரி ,....மனதார பயபக்தியோடு இறையருள் வேண்டி பாடுங்க.... நிச்சயம் உங்க கஷ்டத்தினை அந்த முருகன் அதாவது கந்தன் தீர்த்துவைப்பார்.... அதுவும் செவ்வாயன்று பாடினால் விசேஷமோ...விசேஷம்.... பாடுங்க... பக்தியோடு...இதோ அந்த பாடல் வரிகள் உங்களுக்காக.....

kandha sashti kavasam


சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டன் பாளையத்திலுள்ள உலகிலேயே உயரமான முருகன் 146அடி சிலை(கோப்பு படம்)

kandha sashti kavasam

நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை.

குறள் வெண்பா

அமரரிடர் தீர வமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணியாட

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலாய் எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக….

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக

ரகணபவச ரரரர ரரர

ரிகண பவச ரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீராநமோ நம

நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னையாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்


கிலியும் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடியாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

திருத்தணி முருகன் கோயில் தோற்றம் (கோப்பு படம்)


இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொக மொக மொகமொக மொக மொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்

என் தலைவைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க


என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடையழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

ஐவிரலடியினை அருள் வேல் காக்க

கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

திருச்செந்துாரின் கடலோரத்தில் செந்தில்நாதன் குடிகொண்ட கோயில் (கோப்பு படம்)

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

kandha sashti kavasam


kandha sashti kavasam

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலு மிருட்டிளும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்க

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய் விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட

kandha sashti kavasam


kandha sashti kavasam

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

உன்னைத் துதித்த உன்திருநாமம்

சரவணபவனே சைலொளிபவனே

திரிபுரபவனே திகழொளிபவனே

பரிபுரபவனே பவமொழிபவனே

அரிதிருமுருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்

kandha sashti kavasam


அன்னை பார்வதிதேவியுடன் முருகன் மற்றும் விநாயகர் (கோப்புபடம்)

kandha sashti kavasam

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா

பழநிப் பதிவாள் பாலகுமரா

ஆவினன் குடிவாள் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக

ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்

கந்தசஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடனாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேச முடனொரு நினைவதுமாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசைமன்ன ரென்மர் செயலதருள்வர்

மாற்றலாரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத்தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலக்ஷமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாக

சூரபத்மாவைத் துணித்தகையதனால்

இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குறமகள் மணமகள் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெற்றி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

என்று மனமுருக பாடிப்பாருங்கள்...உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் விலகிச்செல்வதை நீங்களே காண்பீர்கள்.

Tags

Next Story