நீங்கள் பிறந்த மாதத்தில் ஜென்மநட்சத்திர கோயிலுக்கு போங்க...பிரச்னைகள் தீரும்
![நீங்கள் பிறந்த மாதத்தில் ஜென்மநட்சத்திர கோயிலுக்கு போங்க...பிரச்னைகள் தீரும் நீங்கள் பிறந்த மாதத்தில் ஜென்மநட்சத்திர கோயிலுக்கு போங்க...பிரச்னைகள் தீரும்](https://www.nativenews.in/h-upload/2022/11/04/1613021-4-nov-27-star-temples.webp)
Jenma Natchathiram-மனிதர்களை வழி நடத்துவது ஆன்மீகம் ஒரு புறம் என்றாலும் ஜோசியம் வழிகாட்டியாக அவ்வப்போது நமக்கு சமிக்ஞைகளை தருகிறது. பலர் இதனை நம்புகின்றனர். செய்தித்தாளாகட்டும் காலண்டராகட்டும், விடிந்தவுடன் இன்றைய ராசி பலனை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்குங்க நம் நாட்டில.
ஜோசியத்தில் பல விஷயங்கள் எதிர்கால கணிப்புகள் ஒரு சில நேரங்களில் பலன் தருகின்றன. அக்காலத்தில் மன்னர்கள் ஆட்சியில் ஜோசியர்கள் சொன்னதை வைத்துதான் மன்னர்களே முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக வரலாறுகளும் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உண்மையில் முழுமையாக ஜோதிடத்தினை கற்றுணர்ந்தவர்கள் கூறுவது நிச்சயம் பலித்தும் விடுகிறது. இதனை நாமேஅனுபவ பூர்வமாக கண்டுள்ளோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் ஒவ்வொருவரும் பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் , மஞ்சள், குங்குமம் ,எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்கு வாங்கிக் கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னதானம் செய்துவிட்டு வந்தால் உங்கள் நட்சத்திர தெய்வம்உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் ... இதனைத் தவறாது செய்துதான் பாருங்களேன்... அதற்கு பிறகு உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்களேஅறிந்து கொள்வீர்கள் இதன் மகிமையை...
நட்சத்திரங்களுக்குண்டான கோயில் எது? எப்படி செல்லவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
birth month genma star temple visit for problem solution
அஸ்வினி ஜென்ம நட்சத்திரத்துக்கான கோயிலான திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் (பைல்படம்)
birth month genma star temple visit for problem solution
அஸ்வினி
அஸ்வினி ஜென்ம நட்சத்திரத்துக்கான கோயிலானது திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் ஆகும். இக்கோயிலில் பெரிய நாயகி அம்மன் வீற்றிருக்கிறார்.
தலவரலாறு:
அரக்க குலப் பெண் ஜல்லிகை சிவ பக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவி மருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அஸ்வினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்குவழிபடுவதாக ஐதீகம். அஸ்வினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்யம் நிலைக்கும்.
திருவாரூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
போன்:94438 85316 ,04369222392
பரணி:
நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் - சுந்தரநாயகி அம்மன்.
தலவரலாறு:
இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு,சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக்கண்டார். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால்இது பரணித்தலமானது.
சிறப்பு:
பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமிஇருப்பதால் சக்தி அதிகம்.
மயிலாடுதுறையிலிருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால்செல்லும் வழியில் 15 கி.மீ துாரத்தில் நல்லாடை உள்ளது.
கோயிலானது காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணிவரை.
9486631196,04364 285341.
birth month genma star temple visit for problem solution
birth month genma star temple visit for problem solution
ஜென்ம நட்சத்திரம் பரணிக்கான நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
கார்த்திகை :
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வர் கோயில், துங்கபாலஸ்தனாம்பிகை அம்மன்.
தலவரலாறு: தேவர்கள் பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்றிமாக எழுந்தததால் '' காஞ்சன் நகரம் '' எனப்பட்டது.அதுவே கஞ்சா நகரம் (பொன்நகரம்) என்றாகிவிட்டது.
சிறப்பு:
கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும். இக்கோயிலானது மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ. துாரத்தில் உள்ளது. கோயிலானது காலை 10 மணி முதல் 11 மணி வரை , மாலை 4 மணி முதல் 5 மணி வரை. 94874 43351 ,04364 282853
ரோஹிணி:
காஞ்சிபுரம் பாண்டவதுாதப் பெருமாள் கோயில்
தலவரலாறு:
வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக்கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்டபோது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது.ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதுாதப் பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் வழிபடுவது.
சிறப்பு: காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை. காலை 7மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை. 044-27231899.
மிருகசீரிஷம்:
கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: 17.00to19.00
94433 51528 & 04366- 269 965.
birth month genma star temple visit for problem solution
மிருகசீரிஷ ஜென்ம நட்சத்திரத்துக்கான எண்கண் ஆதிநாராயண பெருமாள் கோயில் (பைல்படம்)
birth month genma star temple visit for problem solution
திருவாதிரை:
கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: 06.30to11.30 & 16.00to20.00
99440 82313 &94435 86451.
புனர்பூசம்:
கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: 06.30to10.30 & 17.00to19.00 99941 07395 & 04174 226 652
பூசம்:
கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: அபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: 16.00to19.00
போன்: 97507 84944 & 96266 85051.
ஆயில்யம்:
கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும்.
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,
திறக்கும்நேரம்: 09.00to13.00 & 16.00to19.00
99940 15871& 0435- 200 0240
மகம் ஜென்மநட்சத்திரத்துக்கான ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில் (பைல்படம்)
மகம்:
கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: 06.00to18.00
95782 11659 & 93624 05382.
பூரம்:
கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: 07.00to11.00 & 17.00to19.00 98651 56430 & 99652 11768
உத்திரம்:
கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,
திறக்கும்நேரம்: 08.00to12.00 & 18.00to20.00
98439 51363 & 0431- 254 4070.
ஹஸ்தம்:
கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: 07.00to12.00 & 17.30to19.30
95002 84866
சித்திரை:
கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,
திறக்கும்நேரம்: 07.30to11.30 & 15.00to18.00
94439 61948 &97902 95795.
birth month genma star temple visit for problem solution
ஜென்ம நட்சத்திரம் சுவாதிக்கான சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில் (பைல்படம்)
birth month genma star temple visit for problem solution
சுவாதி:
கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: 08.00to10.00 & 17.00to19.00
93643 48700 & 9382684485.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu