/* */

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்
X

கோப்பு படம்

மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று தமிழ் மாதமான கார்த்திகை பிறந்துள்ளது. இதையொட்டிமுன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வது வழக்கம்.

ஐயப்ப பக்தர்கள், இன்றில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வது வழக்கம்.

அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் ஏராளமானோர் அதிகாலையில் கோவிலுக்கு சென்று, மாலை அணிந்து விரதத்தை முறைப்படி தொடங்கினர். திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், அதிகாலையில் பக்தர்கள் அதிகளவில் வந்து, சன்னதியில் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டன்ர். அப்போது, சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டனர்.

இதேபோல், திருப்பூர் நகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் அதிகாலையிலேயே சரண கோஷங்களின் முழக்கம் கேட்கக் தொடங்கின. குடும்பத்தினருடன் பலரும் வந்து மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பனுக்கு விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர்.

Updated On: 17 Nov 2021 1:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?