/* */

ஆடி அமாவாசை சிறப்புகள்

பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது

HIGHLIGHTS

ஆடி அமாவாசை சிறப்புகள்
X

அமாவாசை என்பது இந்துக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த நாள் என கருதப்படுகிறது. அமாவாசை அன்று முழுவதும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் இன்றிலிருந்து வளர்வதாக ஒரு ஐதீகம். அதனால்தான் இதை வளர்பிறை என சொல்லப்படுகிறது.

இதில் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்கள் மேலும் விசேஷ தினங்களாக கருதப்படுகிறது. இதில் ஆடி அமாவாசையைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முக்கியமாக அமாவாசை அன்று நீத்தோர் கடனை செய்வது வழக்கம். இந்து சாஸ்திரப்படி, ஆடி முதல் தை வரையிலான காலம் வரை பித்ருக்கள் எனப்படும் நீத்தோர் நம்மைக் கண்டு ஆசி தெரிவிக்க பூலோகத்துக்கு வருகின்றார்கள். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து கிளம்பும் நாள் இன்று. அதனால் அவர்களை பூவுலுகுக்கு வரவேற்க இன்று தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

இதே போல மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அன்றுதான் அவர்கள் பூலோகத்துக்கு வந்து சேருகிறார்கள். அதே போல தை அமாவாசை அன்று பூலோக்கத்தில் இருந்து கிளம்பி பித்ரு லோகத்துக்கு செல்கிறார்கள். அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அதே போல் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். அதனால் அம்மனுக்கு விரதம் இருந்து சிலர் தாலி நோன்பு இருப்பதுண்டு. ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு கூழ் வார்த்தால் ஆயிரம் வருடம் கூழ் வார்த்த புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு.

நாமும் ஆடி அமாவாசையை கொண்டாடி, ஆண்டவன் அருளும், பித்ருக்கள் ஆசியும் பெறுவோம்

Updated On: 8 Aug 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  2. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  3. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  4. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  6. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  7. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  8. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
  9. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்